சந்தையில் விற்கப்பட்ட கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

84பார்த்தது
சந்தையில் விற்கப்பட்ட கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
ராமநாதபுரம் பெரியபட்டினம் மீன் சந்தையில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சந்தையில் விற்கப்படும் பொருட்கள் சுத்தமானதாக இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து வந்தனர். அப்போது, மீன் கடையில் இருந்த மீன்களை ஆய்வு செய்ததில் அது கெட்டுப்போய் இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, சுமார் 11 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை பினாயில் ஊற்றி அழித்தனர்.

தொடர்புடைய செய்தி