“பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்” - ஜி.கே.வாசன்

74பார்த்தது
“பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்” - ஜி.கே.வாசன்
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் இன்று (மே 31) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எனவே தமிழக அரசு பள்ளிச்செல்லும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் கவனத்தில் கொண்டு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகளில் வகுப்புகளை தொடங்குவதற்கு பதிலாக ஒருவார காலம் தள்ளி வகுப்புகளை தொடங்க ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி