ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது

74பார்த்தது
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 139 மூட்டைகள் தேங்காய் பருப்பை, 21 விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதிகபட்ச விலையாக ஒரு கிலோ 94 ரூபாய் 95 காசு எனவும், குறைந்தபட்ச விலையாக 58 ரூபாய் 99 காசு எனவும் ஏலம் போனது. நேற்று மட்டும் 5 லட்சத்து 26 ஆயிரத்து 914 ரூபாய்க்கு தேங்காய் ஏலம் போனதாக வேளாண் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர் ஆனந்தி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி