சேலம் மாவட்டம் கெங்கவல்லி
ஆணையம்பட்டி ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளன,
அதில் 4வது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியில் சுமார் 150 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் ஆழ்துளை கிணறு அமைத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றனர். குடிநீர்வினியோகிக்க பயன்பட்டு வரும் மின் மோட்டார் பழுதானதால் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக மின் மோட்டாரை சரி செய்யப்படாமல் கிடப்பில் போடபட்டு அலட்சியமாக இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது, இதை சரி செய்ய அப்பகுதி மக்கள் ஊராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்க எடுக்கவில்லை, இதனால் வேறொரு பகுதிக்கு செல்லும் குடிநீரை மாற்றி 20நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது, இதனால் வீரகனூர் நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீரை பிடித்து எடுத்து செல்லும் அவல நிலையாக உள்ளது மேலும் 10நாட்களுக்கு மேல் பிடிக்கும் தண்ணீரில் புழுகு வைத்து விடுவதால் குடிநீர் பயன்படுத்த முடியவில்லை என குற்றம் சாட்டு வருகின்றனர், பழுதான மின் மோட்டாரை உடனடியாக சரி செய்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.