மக்காச்சோள பயிருக்கு போடப்பட்ட மின் வேலியில் சிக்கி பெண் பலி

1082பார்த்தது
மக்காச்சோள பயிருக்கு போடப்பட்ட மின் வேலியில் சிக்கி பெண் பலி
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பகடப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 63). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மண் தூர்வாரும் பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதே கிராமத்தில் விவசாயி கருப்பழகிக்கு சொந்தமான தோட்டத்தில் விறகு சேகரிக்க சென்றார். அங்கு மக்காச்சோளத்திற்கு போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மல்லிகா சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த வீரகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விைரந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் மக்காச்சோள பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள் வராமல் இருக்க மின்வேலி போடப்பட்டதாக நிலத்தின் உரிமையாளர் கருப்பழகி, நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்த விவசாயி சிவகுமார் (53) ஆகிய 2 விவசாயிகள் மீது வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி