அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

61பார்த்தது
ஆத்தூர் அருகே மூன்று சக்கர ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கிருஷ்ணமூர்த்தி இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி செல்வியுடன் அவருக்கு சொந்தமான மூன்று சக்கர ஆட்டோவில் தலைவாசல் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்குவதற்காக சென்று உள்ளார். அப்போது சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொத்தாம்பாடி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கிருஷ்ணமூர்த்தி தலை நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் லேசான காயத்துடன் உயிர் தப்பிய அவரது மனைவி செல்வியை அருகிலிருந்தவர்கள் வீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி