ஆத்தூரில் அனைத்து கட்சியினர் இரங்கல் கூட்டம்

5190பார்த்தது
ஆத்தூரில் அனைத்து கட்சியினர் இரங்கல் கூட்டம்
தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். இதையொட்டி ஆத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே அனைத்து கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கும் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அங்கு அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் விஜயகாந்த் புகழ் பற்றியும் அவர் தமிழக மக்களுக்கு செய்த உதவிகள் பற்றியும் நிர்வாகிகள் பேசினர். இதில் ஆத்தூர் ஜெயசங்கரன் எம். எல். ஏ. , நகர அ. தி. மு. க. செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் சேகர், தி. மு. க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், த. மா. கா. மாவட்ட தலைவர் காளிமுத்து, நகர தலைவர் சண்முகம், கொ. ம. தே. க. மாவட்ட செயலாளர் ரமேஷ், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஒசுமணி, நகர தலைவர் முருகேசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வானவில், ம. தி. மு. க. மாவட்ட செயலாளர் கோபால்ராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நாராயணன், இந்திய ஜனநாயக கட்சி வெங்கடேசன், ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி