மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஜுன் மாதம் வாங்கிக் கொள்ளலாம்!

16558பார்த்தது
மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஜுன் மாதம் வாங்கிக் கொள்ளலாம்!
தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்த நிலையில், ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில், துவரம் பருப்புக்கான ஒப்பந்தப் புள்ளிகளை முடிவு செய்து கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி