ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகே கோலியார்கோட்டை பகுதியில் ஒரு வார காலத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக பகுதி மக்கள் குறை கூறி வந்த நிலையில், இது குறித்து மின்வாரியத்துறையிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆண்கள் பெண்களில் ஆர் எஸ் மங்கலம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் சம்பவம் அறிந்து வந்த ஆர் எஸ் மங்கலம் காவல் துறையினர் கலைந்து செல்லவில்லை என்றால் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கலைக்கப்படும் என தெரிவித்ததாக சொல்லப்பட்டாக கூறிய நிலையில் மின்தடை ஏற்பட்டது காரணமாக கேட்க வந்த எங்களை அடிப்பதாக கூறிய காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர். எஸ். மங்களம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலை வந்த நிலையில் ஆர் எஸ் மங்கலத்தில் பொறுப்பு அதிகாரி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. தனுஷ்குமார், IPS ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து
பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் இங்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலை வந்தது.