பரமக்குடி அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா!

552பார்த்தது
பரமக்குடி அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா!
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் 23-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இயக்குநா் பாஸ்கரன்.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் அ. மேகலா தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் பாஸ்கரன் பங்கேற்று, 604 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அளவிலான தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த 37 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பின்னா், பாஸ்கரன் பேசியதாவது: மாணவா்கள் தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமை ஆகிய மூன்றையும் இணைத்து செயல்பட்டால் வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடையலாம். விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம். மாணவா்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மின்னணுவியல் துறைத் தலைவா் சிவக்குமாா் வரவேற்றாா். இதில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி