அதிமுக நிர்வாகியை திமுகவினர் தாக்கியதாக புகார்.!

5213பார்த்தது
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 இந்த நிலையில்  கமுதி அருகே எம். புதுக்குளம் கிராமத்தில் வாக்கு பதிவு காலை உணவு இடைவேளையின் போது, அதிமுக வாக்குச்சாவடி முகவரும், கிளைச் செயலாளருமான பொன் பாண்டியனை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினரும் எம். புதுக்குளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான  முருகன் உள்பட நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பொன்பாண்டியன் படுகாயம் அடைந்தார்.

 கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான கோவிலாங்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி