மட்டன் சமைக்காததால் ஆத்திரம்.. மனைவி, மகனை வெட்டிய நபர்

558பார்த்தது
மட்டன் சமைக்காததால் ஆத்திரம்.. மனைவி, மகனை வெட்டிய நபர்
ஈரோடு: பெருந்துறையை அடுத்த நல்லபாளியைச் சேர்ந்தவர் கருப்புசாமி (50). மனைவி சாரதா. இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கருப்புசாமி, அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்த கருப்புசாமி, மட்டன் ஏன் சமைக்கவில்லை என சண்டையிட்டு மனைவியை அறிவாளால் தலையில் வெட்டியுள்ளார்.

இதனை தடுக்க வந்த அவரது மகன் பிரகாஷ்ராஜையும் அறிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பான புகாரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி