கிஸ்துவாரில் லேசான நிலநடுக்கம்

77பார்த்தது
கிஸ்துவாரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் கிஸ்துவாரில் காலை 6.36 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7-ஆக பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். மேலும் நிலநடுக்கம் குறித்து வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் நான்கு நாட்களுக்கு முன்பு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி