திருமணமான 5 நாட்களிலேயே கணவனை கொன்ற பெண்

62071பார்த்தது
திருமணமான 5 நாட்களிலேயே கணவனை கொன்ற பெண்
உத்தரப்பிரதேச மாநிலம் மாவ் மாவட்டத்தின் தோஹாரிகாட் காவல் நிலைய பகுதியில் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி லவ்குஷ் சவுகான் (24), பாயல் சவுகான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன், பாயலுக்கு, தினேஷ் என்ற இளைஞருடன் தொடர்பு இருந்துள்ளது. கடந்த 18ஆம் தேதி லவ்குஷ் சவுகான், பாயலின் காதலன் தினேஷ் மற்றும் அவரது நண்பர் உதவியுடன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சில மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி