அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

60பார்த்தது
திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் ப. கருப்பையாவுக்கு ஆதரவாக புதுக்கோட்டை காந்தி நகரில் புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன் காந்திநகர் பகுதியில் வாக்க சேகரித்தார்.
மதம் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் ப. கருப்பையா போட்டிடுகிறார். தற்பொழுது அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை காந்தி நகர் பகுதியில் புதுக்கோட்டை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன் மற்றும் அப்பகுதி கழக பொறுப்பாளர் உடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவர் தெரிவிக்கையில் தாலிக்கு தங்கம் மாணவர்களுக்கு லேப்டாப் அம்மா உணவகம் உள்ளிட்ட அதிமுக கொண்டு வந்த திட்டங்களையும் திமுக அரசு முடக்கி உள்ளது.
மக்களுக்கு இது போன்ற உதவிகள் செய்ய வேண்டுமானால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் அதை வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் நமது வேட்பாளரை வெற்றி பெற செய்து பொதுமக்களுக்கு எப்போது அதிமுகவால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடர வேண்டும் அதனை நீங்கள் செயல்படுத்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் அப்பகுதி வட்டச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி