ஜல்லிக்கட்டு காளையுடன் சென்று வாக்கு சேகரிப்பு!

1538பார்த்தது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற்ற விரும்பன் காளையுடன் சென்று வாக்கு சேகரித்த சிவகங்கை அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்.

சிவகங்கை தொகுதிக்கு அதிமுக சார்பில் சேவியர் தாஸ் போட்டியிடுகிறார். இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கைகுறிச்சி கிராமத்தில் வாக்கு சேகரிக்க வருகை புரிந்தார் அப்பொழுது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இவ்வருடம் முதல் பரிசு பெற்ற ஜல்லிக்கட்டு காளையான விரும்பன் காளையுடன் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் வேட்பாளர் சேவியர் தாஸிற்கு ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.

பின்னர் மக்களிடம் பேசிய வேட்பாளர் சேவியர்தாஸ், திமுக ஆட்சியில் ஏழைகளுக்கு தாலிக்கு தங்கம் மாணவ மாணவியருக்கு லேப்டாப், சைக்கிள், கர்ப்பிணிமார்களுக்கு பெட்டகம், பண உதவி உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெரும்பான திட்டங்களை தற்போது முடக்கியுள்ளனர். மீண்டும் அதிமுக ஆட்சி வெற்றி பெற்று உடன் இவர்கள் முடக்கிய அனைத்தும் மீண்டும் செயல்படுத்தப்படும்.

ஆகவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கருக்கு அப்பகுதி பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் பொன்னாடை போற்றி வரவேற்றார்கள்.

தொடர்புடைய செய்தி