காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பகுதி அரசு புதிய தொடக்கப் பள்ளியில் தேசிய வாய் சுகாதாரத் திட்டம் மூலம் பள்ளி பொறுப்பாசிரியை அன்புச்செல்வி ஏற்பாட்டில் நேற்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் பங்கேற்று பல் மருத்துவப் பரிசோதனை நவீன கருவிகளை பயன்படுத்தி மேற்கொண்டனர். இதில் பல மாணவர்களுக்கு பல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது.