வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

84பார்த்தது
வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு போலீசார்வி விசாரணை.

பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன்
முத்துசாமி வயது 60
இவர் சிறுவாச்சூரில் உள்ள மாட்டுப் பண்ணையில் கூலி வேலை செய்து வரும் நிலையில் சிறுவாச்சூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதுகுறித்த தகவல் அறிந்த அவரது மகள் பிரியதர்ஷினி சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் புகார்தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து போலீசார், விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் எது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி