ஜவுளித்துறையில் பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

61பார்த்தது
ஜவுளித்துறையில் பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு
பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் ஜவுளித்துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற மாவட்ட ஆட்சியர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தின் துணிநூல் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, தமிழக அரசு, துணிநூல் துறை மூலம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலர்கள் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியினை பெற விரும்புபவர்கள் www. tntextiles. tn. gov. in. /jobs என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர், மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தான்தோன்றிமலை, கரூர்-639005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது rddtextileskarur@gmail. com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04324- 299 544, மற்றும் 98945 60869, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா கற்பகம், வெளியிட்டுள்ள தகவலின் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி