தொழிலாளர் தினம், சிஐடியு சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி

50பார்த்தது
மே ஒன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்திய தொழிற்சங்க மையமான சிஐடியு சார்பில், மே ஒன்றாம் தேதி காலை 8 மணி அளவில் பெரம்பலூர் நகர் மற்றும் பல்வேறு இடங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன அதன்படி துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வீர முழக்க கோஷம் மிட்டனர், அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பில், மாநில செயலாளர் ஜடா ஹெலன் மற்றும் மாவட்டச் செயலாளர் அகஸ்டின் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். இதனை அடுத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன மேலும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றி வைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன, சி ஐ டி யு மாவட்ட செயலாளர் அகஸ்டின் சி ஜடியு மாநில செயலாளர் ஜடா ஹெலன் மாவட்ட பொருளாளர் ரங்கராஜ், மாவட்டத் துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணசாமிஆகியோர் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில், மின்வாரியம், ஆட்டோ தொழிற்சங்கம், சாலையோர பணியாளர்கள் என பல்வேறு துறையில், சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி