பொதுவாக தாய் - குழந்தை உறவானது கரு வயிற்றில் உருவாகும்போதே தொடங்கிவிடுகிறது. ஆனால் தந்தையை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே குழந்தையுடனான உறவை மேம்படுத்தவேண்டும். எனவே குழந்தை பிறந்ததிலிருந்தே அவர்களுடன் நேரம் செலவிடுவது அவசியம். உங்களுடைய அன்பை அவர்களிடம் எடுத்துக்கூறுங்கள். அதாவது நீங்கள் அவர்களை நேசிப்பதை அடிக்கடி கூறுங்கள். சிறுவயதிலிருந்தே விளையாட்டு, பாட்டு என அவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்வது அவசியம்.