இன்று (ஜூன் 1) உலகப் பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. பெற்றோர்களுடன் நல்ல புரிதலுடன் இருக்கும் குழந்தைகள் பொதுவெளியிலும் மற்றவர்களுடன் தன்மையாக நடந்துக் கொள்வார்கள். மேலும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வளருவதோடு மனநலம் மற்றும் உணர்ச்சிகளைப் பக்குவப்படுத்தும். குழந்தைகளுடனான உறவை மேம்படுத்த அவர்களுடன் இணங்கிப்போவதுடன், தேவையான இடங்களில் பெற்றோர் தங்களின் முடிவை மாற்றிக்கொள்வதும் அவர்களுக்கு தாய், தந்தை மீதான அன்பையும், மரியாதையையும் கூட்டும்.