'எங்கள் பூரணம் அம்மா' - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!

16858பார்த்தது
'எங்கள் பூரணம் அம்மா' - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!
அரசுப் பள்ளி கட்டுவதற்காக தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு, சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் பூரணம் அம்மாளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்பில் மகேஷ், 'கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம். கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம். எங்கள் பூரணம் அம்மா' என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி