பதஞ்சலி நிறுவனம் உற்பத்தி செய்யும் தேன் மாதிரி சோதனையில் தோல்வியடைந்தது. இதனால் அந்த நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள திதிஹாட்டில் இருந்து பதஞ்சலி பேக் செய்யப்பட்ட தேனின் மாதிரி சோதனைக்காக சேகரிக்கப்பட்டது. தேனின் தரம் நன்றாக இல்லை என்றும், சுக்ரோஸின் அளவு இரட்டிப்பாவதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை ராம்நகரைச் சேர்ந்த விநியோகஸ்தர் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.