என் சின்னத்தை தவிர்த்துவிட்டு (மைக்) யாராலும் போட்டியிட முடியாது!

73பார்த்தது
என் சின்னத்தை தவிர்த்துவிட்டு (மைக்) யாராலும் போட்டியிட முடியாது!
என் சின்னத்தை தவிர்த்துவிட்டு (மைக்) யாராலும் போட்டியிட முடியாது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சின்னத்தை அறிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு. சீமானுக்குத்தான் ஓட்டு, சின்னத்துக்கு இல்லை. கரும்பு விவசாயி சின்னத்துக்காகக் கடைசி வரை போராடினோம். சின்னத்தில்தான் விவசாயியா..? நான் நிஜத்திலேயே விவசாயிதான்.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் எங்களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் என் வாழ்நாளில் சமரசத்துக்கு இடமில்லை. நாளை முதல் தேர்தல் பரப்புரை தொடங்க உள்ளோம். நாம் தமிழர் மைக் (ஒலிவாங்கி) சின்னத்தில் போட்டியிடும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி