காங்கிரசில் இருந்து விலகும் அடுத்த தலை?

57பார்த்தது
காங்கிரசில் இருந்து விலகும் அடுத்த தலை?
கன்னியாகுமரி எம்.பி சீட் வழங்கப்படாமல் இருந்ததில் கடந்த சில தினங்களாகவே அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி. இதனை தொடர்ந்து நேற்று (பிப்.24) அவர் பாஜகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து ‘மற்றொரு காங்கிரஸ் எம்பியும் கட்சியில் இருந்து விலகுவார்’ என தகவல் பரவுகிறது. விலகிய பின்னர் அவர் பாஜகவிலோ அல்லது அதிமுகவிலோ இணைவார் என்ற தகவல் பரவி வருகிறது. அது வேறு யாரும் இல்லை திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்தான். கடந்த முறை திருச்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவருக்கு இந்த முறை சீட் தரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பியுள்ளனர். இதனால் சீட் கிடைக்காது என உறுதியானதால் கட்சியிலிருந்து விலகி மாற்று கட்சியில் இணையலாம் என தகவல் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி