நீட் வினாத்தாள் கசிவு - இந்தி நாளிதழ் நிருபர் கைது

68பார்த்தது
நீட் வினாத்தாள் கசிவு - இந்தி நாளிதழ் நிருபர் கைது
ஜார்கண்டில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்தி நாளிதழ் நிருபரை சிபிஐ கைது செய்துள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் நகரில் உள்ள ஓயாசிஸ் பள்ளியில் இருந்து வினாத்தாள் கசிந்தது தொடர்பாக பள்ளியின் முதல்வர் எசானுல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் முறைகேட்டில் உதவியதாக முகமது ஜமாலுதீன் என்ற இந்தி நாளிதழ் பத்திரிகையாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி