ஆளுநர் குற்றச்சாட்டும்... சட்டப்பேரவை மரபும்!

78பார்த்தது
ஆளுநர் குற்றச்சாட்டும்... சட்டப்பேரவை மரபும்!
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வெறும் 2 நிமிடத்தில் தனது உரையை முடித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவும், முடிந்த பிறகும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவை மரபுபடி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்தும், கூட்டம் நிறைவடையும் போது தேசிய கீதம் இசைக்கப்படுவதே மரபாக உள்ளது.

தொடர்புடைய செய்தி