அரசு விதி மீறி மது விற்பனை செய்த மூவர் கைது.

80பார்த்தது
அரசு விதி மீறி மது விற்பனை செய்த மூவர் கைது, 307 மது பாட்டில்கள் பறிமுதல்



 குமாரபாளையத்தில் அரசு அனுமதியின்றி அதிக விலைக்கு அரசு மது பாட்டில்கள் விற்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 307 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

குமாரபாளையத்தில் அரசு அனுமதியின்றி அதிக விலைக்கு அரசு மது பாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். எம். ஜி. ஆர். நகர் கேஸ் பங்க் பின்புறம் மது விற்பனை நடப்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார், அங்கு மது விற்றுக்கொண்டிருந்த  சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி, 51, கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த சக்திவேல், 23, ஆகிய இருவரை கைது செய்து, 130 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராஜம் தியேட்டர் பின்புறம் மது விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 46, என்பவரை கைது செய்து, 177 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 307 பாட்டில்கள் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.