கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

77பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் உள்ள செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பெண் குழந்தைகளை 'காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கபடி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியினை சமூக நலன், பெண்கள் உரிமை துறை மற்றும் சிவம் சிலம்பம் அறக்கட்டளை இணைந்து நடத்தினார்கள். இதில் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் செயலர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் மாணவர்களை பாராட்டினார்கள்.