பரமத்தி வேலூர் அடுத்துள்ள கபிலர்மலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
சாமிக்கு பல்வேறு வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்