காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா

1878பார்த்தது
மல்லசமுத்திரம் அடுத்துள்ள காளிப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் கோபுர கலசத்திற்கு புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கோவில் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.