டூவீலரில் வந்தவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயம்.

64பார்த்தது
குமாரபாளையம் அருகே டூவீலரில் வந்தவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

 

கள்ளக்குறிச்சி, மேலூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, 26. கூலித்தொழிலாளி. இவர் மார்ச். 28ல் கோவையிலிருந்து, கள்ளக்குறிச்சி நோக்கி, தனது ஹீரோ ஸ்ப்லேண்டர் டூவீலரில், குமாரபாளையம் அருகே, சேலம், கோவை புறவழிச்சாலையில் மாலை 05: 30 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது தன்வந்திரி மருத்துவமனை அருகே நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து இவரது தாயார் ராணி, 49, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து  வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி