நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை

1541பார்த்தது
நாகை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நாகை அபிராமி அம்மன் திருவாசகம் பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

இந்தியா கூட்டணி என்பது கூட்டணியா கேரளாவுக்குள் எதிர்க்கட்சியாகவும் கேரளாவுக்கு வெளியே கூட்டணையாகவும் செயல்படுவது கூட்டணியா கூட்டணி தர்மமா என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி கட்ச தீவைப் பற்றி ஒப்புக்கு பேசுவதாகவும் பத்தாண்டு கால ஆட்சியில் மீட்டருக்கு வேண்டும். அவர்களால் காவேரி நதிநீரை கூட தமிழகத்திற்கு பெற்றுத்தர முடியவில்லை. தேர்தல் வாக்குறுதியில் கூட அவ்வாறு கூறவில்லை.

காவேரி நீரை பெற்று தருவதாக பாஜக அறிவித்தால் கர்நாடகாவில் தோற்றுவிடும் என்ற தோல்வி பயம் எழுந்துவிட்டது எனவும். அடிமை இந்தியாவிலிருந்து ஆர் எஸ் எஸ் இருப்பதாகவும் பாரதிய ஜனதா என்ற கட்டிடத்தில் அண்ணாமலை ஒரு செங்கலாக உள்ளவர் அவர் நாம் தமிழர் கட்சியை அழித்து விடுவதாக வாய்ச்சவடல் விடுகிறார் என அண்ணாமலையை எச்சரித்து பேசினார்.

தொடர்ந்து நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவிற்கு மை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி