வேதாரண்யத்தில் கடல் சேற்றில் சிக்கிய தம்பதி மீட்பு

5161பார்த்தது
வேதாரண்யத்தில் கடலில் குளிக்க சென்றபோது சேற்றில் சிக்கிய வயதான தம்பதி ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்பு.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடலில் குளிக்க சென்ற போது சேற்றில் சிக்கிய சிக்கல் பொரவாச்சேரியை சேர்ந்த 70 வயதான ஜெயராம் கணபதி அவரது மனைவி கமலா கடலில் இறங்கி குளிக்க சென்றுள்ளனர். கடல் சேறும் சகதியும் இருப்பதை அறியாத வயதான தம்பதியினர் கடலில் இறங்கி சிறிது நேரத்தில் அவர்கள் இடுப்பளவு சேற்றில் சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சேற்றில் சிக்கிய வயதான தம்பதியான ஜெயராம் கணபதி, கமலா ஆகிய 2 பேரையும் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

வேதாரண்யம் கடற்கரையில் தற்போது சேறும், சகதியுமாக இருப்ப தால், இங்கு யாரும் குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என அறிவிப்பு பலகை இருப்பதை அறியாத வயதான தம்பதியினர் சகதியில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி