மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சின்ன கொட்டாய்மேடு கிராமத்தில் முடவன் ஆற்றில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இன்று சீர்காழி ஆர் டி ஓ அர்ச்சனா தலைமையில் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், நேர்முக உதவியாளர் சண்முகம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.