வயல் வெளியில் செல்லும் மின்கம்பிகள்

73பார்த்தது
வயல் வெளியில் செல்லும் மின்கம்பிகள்
நாகப்பட்டினம், ஜன. 4-
தேவன்குடி கிராமத்தில் வயல் வெளியில் செல்லும் மின்கம்பிகள் மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி கிராமத்தில் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திருமருகல் பகுதியில் இருந்து தேவன்குடி கிராமத்திற்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவன்குடி நடுத்தெருவில் இருந்து திருவாசல் தோப்பு தெரு பகுதிக்கு வயல் பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு தெருவிளக்கு மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வயல்வெளியில் செல்லும் மின் கம்பிகள் சேதமடைந்து மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் காற்று வேகமாக வீசும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து அடிக்கடி தீப்பொறிகள் கொட்டி அப்பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் தீ விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் இந்நேரத்திலும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி