ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

70பார்த்தது
ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி கடந்த சில நாட்களாக பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மேலும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழக அரசு அறிவித்தபடி தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. திருமருகல் ஒன்றியத்தில் 95 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது காலை முதலே புதிய சீருடை அணிந்து மாணவ-மாணவிகள் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் மகேஸ்வரன் தலைமையில் ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளிக்கு வந்து மாணவ-மாணவிகள் தங்களது நண்பர்களை சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி