வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.கலாநிதி வீராசாமி

61பார்த்தது
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.கலாநிதி வீராசாமி
வட சென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக அயலக அணித் தலைவர் கலாநிதி வீராசாமி மீண்டும் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றிப் பெற்றார். இந்நிலையில், சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூரில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைக் கலாநிதி வீராசாமி சந்தித்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். அவரது வருகையின்போது திமுகவினர் மலர் தூவி வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி