தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் மூலம் பாஜக மோடி அரசின் மேலும் ஒரு ஊழல் கொள்கை அம்பலமாகியுள்ளது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பதிவில், லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்குவதற்காக பாஜக தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேசு பொருளாக மாறியுள்ளது.