2000 கோடி செலவில் வீடுகள் பழுது பார்ப்பு - முதலமைச்சர் அறிவிப்பு

83849பார்த்தது
2000 கோடி செலவில் வீடுகள் பழுது பார்ப்பு - முதலமைச்சர் அறிவிப்பு
கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று 2001 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகளை ரூ.2,000 கோடி செலவில் பழுதுபார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் உரையாற்றி வரும் முதலமைச்சர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 2 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள 2.5 லட்சம் வீடுகள் பழுது பார்த்து புனரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கிராமப்புற மக்களின் மனதை குளிரச் செய்யும்.

தொடர்புடைய செய்தி