பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டுப் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் வன்கொடுமை தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட, பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வரும் 21ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி எம்.நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏ மகன், மருமகள் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.