பல்கலைகழக பெண்கள் விடுதியில் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு.

1085பார்த்தது
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் மர்ம நபர் இரவில் புகுந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை அருகே காமராஜர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் விருந்தினர் மாளிகை மற்றும் துணை வேந்தர் மாளிகை அருகே மாணவிகள் தங்குவதற்கான தங்கும் விடுதி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநில மாணவிகளும் தங்கி படித்து வருகின்றனர். நேற்றிரவு பல்கலைகழக வளாகத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்துள்ளார். இதனை பார்த்த மாணவிகள் கூச்சலிட அங்கிருந்த பாதுகாவலர் மற்றும் மாணவிகள் அவரை துரத்தி பிடித்தனர். அந்த நபர் போதையில் இருந்துள்ளார். மது போதையில் இருந்த அந்த நபர் தான் தெரியாமல் வந்துவிட்டதாகவும் ஏற்கனவே இறந்துவிட்டதாக இதுபோல வந்துள்ளேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். பிறகு நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் முறையான புகார் தராததால் அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைகழக நிர்வாகமோ, மாணவிகளோ யாரும் புகார் ஏதும் தெரிவிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி