சர்வதேச அளவிலான சதுரங்க போட்டியில் அரசு பள்ளி மாணவி சாதனை

582பார்த்தது
சர்வதேச அளவிலான சதுரங்க போட்டியில் அரசு பள்ளி மாணவி சாதனை
சர்வதேச அளவிலான சதுரங்க போட்டியில் அ. செட்டியார் பட்டி அரசு பள்ளி மாணவி வெற்றி.

மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
இப்போட்டியில் மொத்தம் 936 பேர் பங்கேற்றனர். இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, நியூசிலாந்து, ஜிம்பாவே போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மதுரை மேலூர் ஒன்றியம் அ. செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி க. வேதாஸ்ரீ 9 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஐந்தாம் இடம் பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவி க. வேதாஸ்ரீக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை  அ. செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
தலைமை ஆசிரியை திருமதி.
மு. மணிமேகலை, இம்மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளித்தவரும், அ. செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியருமான ஞா. செந்தில்குமார், கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி