மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நேற்று (19.02.2024) இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரக் கண்டு ஓடிய இளைஞரை துரத்தி பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் வாள் இருந்தது தெரிந்தது.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (24) என்பதும் வாளை காட்டி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் வாளை பறிமுதல் செய்தனர்.