புதிய முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பொறுப்பேற்பு

551பார்த்தது
புதிய முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பொறுப்பேற்பு
தெற்கு ரயில்வேயில் புதிய முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பொறுப்பேற்பு தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியாக எம். செந்தமிழ் செல்வன் வியாழக்கிழமை அன்று பொறுப்பேற்று கொண்டனர். இவர் 2007 ஆம் வருட இந்திய ரயில்வே மின்சார பொறியாளர் சேவை பிரிவை சேர்ந்த அதிகாரி ஆவார். இவர் இதற்கு முன்பு துணை பொது மேலாளர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளரின் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இவர் கொல்கத்தாவில் உள்ள பொறியியல் கழகத்தில் இளநிலை மின்சார பொறியியல் பட்டம் பெற்றவர். தனது முதுநிலை மின்சார பொறியியல் படிப்பை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர் ரயில்வேக்கான ராணுவப் பிரிவிலும் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் அரக்கோணம், ராயபுரம் ஆகிய மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு பணிமனைகளில் மற்றும் சென்னை கோட்டத்தில் முது நிலை கோட்ட மின்சாரப் பொறியாளராக பணியாற்றியுள்ளார். ஜப்பான் தேசிய கூட்டுறவு அமைப்பு நடத்திய 'ஜப்பானில் அதிவேக ரயில் போக்குவரத்து' பற்றிய பயிற்சி பெற்றவர். இதுவரை முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த பி. குகனேசன் துணை பொது மேலாளர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளரின் செயலாளராக பதவி மாற்றம் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி