டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பலி.

70பார்த்தது
டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பலி.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே இரு சக்கர வாகனம் மீது வாகனம் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள ஆண்டிபட்டி கட்டப்பட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்த பாலசுப்ரமணி மகன் சூர்யா (25) என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் -திருமங்கலம் நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சமயநல்லூர் பாலம் அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரி வித்தனர்.

இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி