தொண்டு நிறுவன சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு திட்டம்!

51பார்த்தது
தொண்டு நிறுவன சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு திட்டம்!
தமிழ்நாட்டில் தொண்டு நிறுவனங்கள் சார்பாக நடத்தப்படும் 175 சிறப்பு பள்ளிகளிலும், தமிழக அரசின் மதிய உணவுத் திட்டம் சயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் மொத்தம் 5,725 மாணவர்கள் பயனடைவார்கள். ஜூன் மாதம் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் மதிய உணவு திட்டம் செயல்பட்டு வரும் நிலையில் தொண்டு நிறுவன பள்ளிகளுக்கும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி