ஆயுள் தண்டனை கைதி யுவராஜ் முதல் வகுப்பு சிறை கோரி மனு

552பார்த்தது
ஆயுள் தண்டனை கைதி யுவராஜ் முதல் வகுப்பு சிறை கோரி மனு
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்ககோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. யுவராஜுக்கு முதல் வகுப்பு சிறை வழங்குவது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில் கோவை மத்திய சிறை நிர்வாகம் நான்கு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்தி