கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி நேற்று சிறப்பு பூஜைளகள் நடைபெற்றது. இதை ஒட்டி விநாயகருக்கு பால், மஞ்சள், சந்தனம். குங்குமம், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை காண்பிக்கபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.